sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

/

ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


ADDED : அக் 14, 2024 09:33 PM

Google News

ADDED : அக் 14, 2024 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அரசு நியாயவிலை கடைகளை, தனித்துறையாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 32 கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் கூறியதாவது:

பொது விநியோகத் திட்டத்துக்கு என, தனித்துறை அறிவிப்போம் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை அறிவிக்கவில்லை. அதை விரைவாக அறிவிக்க வேண்டும்.

இந்த தீபாவளிக்கு, ரேஷன்கடை பணியாளர்களுக்கு, 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். சரியான எடையில், தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கிட வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும்.

அபராதத் தொகையை ரத்து செய்தல், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டுப்பாடு இல்லாமல் இறக்குவதை தடுத்தல், உள்ளிட்ட 32 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us