sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'

/

ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'

ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'

ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'


ADDED : மே 29, 2025 12:25 AM

Google News

ADDED : மே 29, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோவையில் உள்ள பிரதான ரோடுகளில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளன.

அதில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில், 'ரெடிமிக்ஸ் தார் கலவை' பயன்படுத்தி, சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

உக்கடத்தில் இருந்து செல்வபுரம் பைபாஸ் ரோடு, சிறுவாணி ரோடு, காளப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழிகள் மூடப்படுகின்றன. சிமென்ட் மூட்டை போல், ரெடிமிக்ஸ் தார் கலவை மூட்டை வந்திருக்கிறது. அதை குழிக்குள் கொட்டி சமன்படுத்துகின்றனர். 10 நிமிடத்தில் மூடப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'ரெடிமிக்ஸ் தார் கலவை, மூட்டை வடிவில் வருகிறது. 2,000 மூட்டைகள் இருப்பு வைத்திருக்கிறோம். மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோட்டில் உள்ள குழிகளை மூடுவதற்கு, ரெடிமிக்ஸ் தார் கலவையை பயன்படுத்துகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us