/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்ம நாயுடு சங்கத்தின் மண்டல ஆண்டு விழா
/
கம்ம நாயுடு சங்கத்தின் மண்டல ஆண்டு விழா
ADDED : ஜன 26, 2026 05:59 AM

பீளமேடு: தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க, கோவை மண்டல 41வது ஆண்டு விழா, நவ இந்தியா எஸ்.என்.ஆர். அரங்கத்தில் நடந்தது.
விழாவுக்கு, கோவை மண்டல தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். விழாவின் ஒரு பகுதியாக, ரேணுகாதேவி அம்மனுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, சமூக முன்னேற்றத்தில் சங்கத்தின் பங்களிப்பு, எதிர்கால திட்டங்கள் குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் பேசினர்.
தொழில், சமூக செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள், கல்வி, விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி, எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், அகில கர்நாடக கம்மவாரி சங்க தலைவர் ராமகிருஷ்ணா, தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க மாநில செயல் தலைவர் மோகன், மாநில இணை செயலாளர் வெங்கிடபதி, கோவை மண்டல செயலாளர் நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

