sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு

/

அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு

அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு

அகதிகள் முகாமில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை கோரிய மனு நிராகரிப்பு

12


ADDED : மார் 15, 2024 03:09 AM

Google News

ADDED : மார் 15, 2024 03:09 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:

இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறக்கும் குழந்தைகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க பரிசீலிக்கும்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். அதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எனக்கு அனுப்பிய பதிலில், 'அகதிகள் முகாம்களில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும், குடியுரிமை கேட்டு உரிமை கோர முடியாது.

பிறப்பு அடிப்படையில் கோருவது என்றால், குடியுரிமை சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பிரிவின்படியே முடியும்' என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் பிறப்பிக்கும் குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும்படி, பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மனுவில் போதிய விபரங்கள் இல்லை என்றும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. குடியுரிமை வழங்குவதற்கு தேவையான விபரங்களை அதிகாரிகளுக்கு அளிக்காமல், பொதுவாக உத்தரவு பிறப்பிக்க, முதல் பெஞ்ச் மறுத்து விட்டது.






      Dinamalar
      Follow us