sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

/

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு


ADDED : அக் 17, 2024 11:51 PM

Google News

ADDED : அக் 17, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: கோவையில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நடந்தது.

நகர் நல அலுவலர் (பொ) பூபதி முன்னிலை வகித்தார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:

மழையை எதிர்கொள்வது தொடர்பான பணிகளை அனைத்து பிரிவு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை தயாராகவும், கூடுதலாகவும் வைத்திருக்க வேண்டும். நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்கள் மற்றும் தடுப்பு சுவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். மழையால் பாதித்த இடங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க துாய்மை பணியை விரைவுபடுத்த வேண்டும். மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறையினர் தயாராக இருக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு, முகாம்களில் தங்க வைக்க வேண்டும்; அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

அப்போது, நிர்வாக பொறியாளர்கள் இளங்கோவன், கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் குமார் மற்றும் மண்டல உதவி கமிஷனர்கள், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us