sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

/

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 14, 2024 04:24 AM

Google News

ADDED : நவ 14, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: ராபி பருவ மக்காச்சோளம், கொண்டைக் கடலை பயிருக்கு, வரும், 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண் இணை இயக்குநர் வெங்கடாசலம் அறிக்கை வருமாறு:

விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காரணமாக, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு ராபி பருவத்தில், மக்காச்சோளம், சோளம், மற்றும் கொண்டைக்கடலை ஆகிய பயிர்களுக்கு வட்டார அளவில் அறிவிப்பு செய்யப்பட்டு, அதனைச் சார்ந்து வரும் அனைத்து கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவும் உள்ளது.

இந்த திட்டத்தில் சேர, ராபி பருவ மக்காச்சோளம், மற்றும் கொண்டைக் கடலை பயிருக்கு வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மேலும், சோளம் பயிருக்கு டிச., 16ம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

சோளம் ஏக்கருக்கு, 163 ரூபாய்; மக்காசோளத்துக்கு, 541.5 ரூபாய்; கொண்டைக் கடலை பயிருக்கு, 231 ரூபாய் என, செலுத்த வேண்டும். வங்கிக்கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர்.

கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள், பொது இ--சேவை மையங்கள் வாயிலாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். விவசாயிகள் காப்பீடு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தெகையயை செலுத்திய பின் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us