sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது

/

 சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது

 சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது

 சோலையாறு அணையில் புனரமைப்பு பணி ரூ.30 கோடியில் நடக்கிறது


ADDED : ஜன 05, 2026 05:33 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில், ஆண்டு தோறும் பெய்து வரும் பருவ மழையை தேக்கி வைத்து, குடிநீர் மற்றும் பாசன விவசாயத்திற்காக பயன்படுத்தும் வகையில், பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் கீழ் அணைகள் கட்டப்பட்டன.

ஆண்டு தோறும் பருவ மழை பெய்யும் போது, மேல்நீராறு அணை, கீழ்நீராறு அணைகளின் தேக்கி வைக்கப்படும் மழைநீர், டனல் வழியாக சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.

160 அடி உயரமுள்ள இந்த அணை நிரம்பியதும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சோலையாறு அணையில் நீர்கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், மூன்று மதகுகளில், ஒரு மதகு பழுதடைந்த நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

அணையின் பாதுகாப்பு குறித்து, உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து,30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை புனரமைப்பு செய்ய முடிவு செய்து, அதற்கான நிதியை உலக வங்கி அதிகாரிகள் கடந்த ஆண்டு ஒதுக்கினர்.

இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உலக வங்கி நிதியுதவியுடன், சோலையாறு அணையில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணி நடக்கிறது. குறிப்பாக, ஷட்டர்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன. அதே போல், அணையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை தடுக்கும் வகையில், பணிகள் தீவிரமாக நடக்கிறது. தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால் இந்த பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு (மே மாதத்திற்கு முன்) முன்னதாக அணை புனரமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்துவிடும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

55 ஆண்டுகளுக்கு பின் மதகுகள் சீரமைப்பு

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சோலையாறு அணை, ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான அணையாகும். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை, இந்த ஆண்டு முழுக்கொள்ளளவை எட்டியதும், மூன்று மதகுகள் வழியாக கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த, 1971ம் ஆண்டு இந்த அணையில் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் அமைக்கப்பட்டன. தற்போது ஆண்டு தோறும் பருவ மழை அதிக அளவில் பெய்வதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், மதகுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. தற்போது, 55 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக அணையின் மதகுகள் முழுமையாக சீரமைக்கும் பணி நடக்கிறது.








      Dinamalar
      Follow us