/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சேம்பருக்கு ரூ.19 லட்சம் வாடகை பாக்கி
/
வக்கீல் சேம்பருக்கு ரூ.19 லட்சம் வாடகை பாக்கி
ADDED : பிப் 15, 2024 06:48 AM
கோவை : கோவை நீதிமன்ற வளாக சேம்பர் அறைக்கு, 19 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாமல் வக்கீல்கள் பாக்கி வைத்துள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மூன்று தளங்களை கொண்ட வழக்கறிஞர்கள் சேம்பரில், வக்கீல் சங்க அலுவலகம், கேன்டீன் மற்றும் 66 வக்கீல்கள் அறைகள் உள்ளது. ஒரு அறைக்கு, ஐந்து பேர் வீதம் மொத்தம், 330 வக்கீல்களுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் அறைக்கு மாத வாடகை, 680 ரூபாய், முதல் தளத்திற்கு, 644 ரூபாய், இரண்டாவது தளத்திற்கு, 610 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒதுக்கீடு பெற்ற வக்கீல்களிடம், மாத வாடகையாக அதிகபட்சமாக , 136 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வாடகை கட்டணத்தை, மாவட்ட நீதிமன்றத்திலுள்ள கட்டட பராமரிப்பு அலுவலரிடம் செலுத்த வேண்டும். ஒதுக்கீடு பெற்றவர்களில், 225 வக்கீல்கள் கடந்தாண்டு நவம்பர் வரை, மொத்தம், 19.16 லட்சம் ரூபாய் வாடகை நிலுவை வைத்துள்ளனர். 95 வக்கீல்கள், வாடகை தொகை முழுவதும் செலுத்தி, 'ஜீரோ பேலன்ஸ்' வைத்துள்ளனர்.

