sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயனற்று கிடக்கும் வாகனங்கள்; அப்புறப்படுத்த வேண்டுகோள்

/

பயனற்று கிடக்கும் வாகனங்கள்; அப்புறப்படுத்த வேண்டுகோள்

பயனற்று கிடக்கும் வாகனங்கள்; அப்புறப்படுத்த வேண்டுகோள்

பயனற்று கிடக்கும் வாகனங்கள்; அப்புறப்படுத்த வேண்டுகோள்


ADDED : பிப் 22, 2024 08:59 PM

Google News

ADDED : பிப் 22, 2024 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், பழைய குடிமைப்பொருள் வழங்கல் அலுவலக வளாகத்தில், பயனற்று கிடக்கும் கழிவு வாகனங்களை, அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி தாலுகாவில், சட்ட விரோதமாக அரிசி கடத்தல் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் பயன்படுத்திய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதேபோல, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களையும் குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.

இதுபோன்று, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள், பழைய குடிமைப் பொருள் வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

உரிமை கோரப்படாத வாகனங்கள், போதிய பாதுகாப்பின்றி உள்ளன. அவை, மழை, வெயிலுக்கு தாக்குப் பிடிக்காமல், பயனற்று காணப்படுகின்றன. இந்த வளாகத்தில், கிளைச்சிறை, தாலுகா போலீஸ் ஸ்டேஷன், கருவூலகம் போன்றவை உள்ள நிலையில், வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு அலுவலர்கள் கூறுகையில், 'பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினால், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த முடியும். துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us