sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆட்டோவுக்கு புதிதாக 'பர்மிட்' வழங்க வேண்டாமென கோரிக்கை

/

ஆட்டோவுக்கு புதிதாக 'பர்மிட்' வழங்க வேண்டாமென கோரிக்கை

ஆட்டோவுக்கு புதிதாக 'பர்மிட்' வழங்க வேண்டாமென கோரிக்கை

ஆட்டோவுக்கு புதிதாக 'பர்மிட்' வழங்க வேண்டாமென கோரிக்கை


ADDED : நவ 26, 2024 10:18 PM

Google News

ADDED : நவ 26, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில் ஆட்டோக்களுக்கு புதிதாக 'பர்மிட்' வழங்கக்கூடாது என, ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வால்பாறையில், ஏற்கனவே 60 ஆட்டோக்கள் இயங்கும் நிலையில், கூடுதலாக, 50 ஆட்டோக்கள் இயக்க மாவட்ட கலெக்டர் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார். இதற்கு வால்பாறை ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை வந்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறையில் இயக்கப்படும் ஆட்டோக்கள் நிறுத்தக்கூட இட வசதி இல்லை. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகையும் தற்போது இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோக்களை இயக்கி வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் மிகவும் சிரமம் உள்ளது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களும் அதிக அளவில் ஆட்டோக்களை பயன்படுத்துவதில்லை. எனவே, வால்பாறையில் ஆட்டோக்களுக்கு புதியதாக 'பர்மிட்' வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us