/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிகாரிகள் வாக்கை காப்பாற்ற கோரிக்கை
/
அதிகாரிகள் வாக்கை காப்பாற்ற கோரிக்கை
ADDED : ஜன 06, 2026 05:08 AM

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்ப்புக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வந்த மனுக்களில் சில:
* கூடலுார் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரத்தினகுமார் மனைவி லட்சுமி, வெங்கடாசலபதி நகரில் வசிக்கிறார். இவரது வீட்டுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது, குடிநீர், மின்சார இணைப்பு உள்ளது. ஆனால் பட்டா வழங்கவில்லை என்று வாரந்தோறும் திங்கட்கிழமை தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார். இனியும் தீர்வு கிடைக்கவில்லை.
* கோனியம்மன் கோயிலில் சமையல் கூட கட்டுமானப்பணியின் போது, அருகே இருந்த அபார்ட் மென்ட் கட்டடம் சேதம் ஏற்பட்டது; சரிசெய்து கொடுப்பதாக கடந்தாண்டு டிச.,24ல் அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரரும் உறுதியளித்தனர்; ஆனால் எந்த பணியும் நடக்கவில்லை. வாக்குறுதி அளித்தபடி பணி செய்து தருமாறு அபார்ட்மென்ட் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
வாரிசு சான்று, பட்டா, நிலஅளவை, ஜாதிசான்றிதழ், அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு பலரும் மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.

