/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் நுாலகம் திறக்க வேண்டுகோள்
/
எஸ்டேட்டில் நுாலகம் திறக்க வேண்டுகோள்
ADDED : ஆக 24, 2025 11:27 PM
வால்பாறை; வால்பாறை நகரில் முழுநேர நுாலகம் செயல்படுகிறது. சோலையாறு நகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகங்கள் செயல்படுகின்றன. இதனால், போட்டித்தேர்வுக்கு தய ா ராகி வரும் மாணவர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர ் கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர்.
எஸ்டேட் பகுதியை சேர்ந்த வாசகர்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் உள்ள நுாலகத்துக்கு 10 கி.மீ., துாரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, படித்த இளைஞர்கள் அதிக அளவில் உள்ள சின்கோனா, ரொட்டிக்கடை, கருமலை, கவர்க்கல், முடீஸ் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நுாலகம் அமைக்க வேண்டும்.
மேலும் எஸ்டேட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு, தற்போது காட்சிப்பொருளாக உள்ள மனமகிழ் மன்றங்களை, வாசகர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் புதுப்பிக்க வேண்டும். மனமகிழ் மன்றங்களுக்கு நகராட்சி சார்பில் நாளிதழ்களை வழங்க வேண்டும்,' என்றனர்.