sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

/

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள் மீண்டும் இயக்க கோரிக்கை


ADDED : ஜூலை 06, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து ஆண்டியூர், உப்பிலியபுதுார் கிராமங்கள் வழியே மீண்டும் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள, அரசு போக்குவரத்து கழகத்தில் மூன்று பணிமனைகளில் இருந்து, 85 அரசு டவுன் பஸ்கள் உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்தில் கிராமங்கள் வழியே கடந்து செல்லும் இந்த டவுன் பஸ்களை நம்பியே மக்கள் பயணிக்கின்றனர்.

பல மாதங்களாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வழித்தடம் எண் '57ஏ' மற்றும் '58' அரசு டவுன் பஸ்களை மீண்டும் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராம மக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சியில் இருந்து, இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் (வழித்தட எண் 58), ஆண்டியூர், பாண்டியன்கரடு கிராமங்களுக்கு சென்று திரும்பியது. இதேபோல, வழித்தட எண் 57ஏ பஸ், உப்பிலியபுதுார் சென்று, அங்கிருந்து வலப்புறமாக திரும்பி சோமந்துரைசித்துார் வரை இயக்கப்பட்டு வந்தது.

மேலும், ஒரு 'டிரிப்' ஆழியாறுக்கும் இயக்கப்பட்டது. இந்த பஸ்களின் இயக்கத்தால், கிராம மக்கள் பெரிதும் பயனடைந்தனர். ஆனால், இரு பஸ்களும், பல மாதங்களாக இவ்வழித்தடத்தில் இயக்கப்படாமல் உள்ளது. மீண்டும் பஸ் இயக்கத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us