sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

/

கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை


ADDED : ஜூலை 08, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, குறிச்சி அருகே, கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குளம் உள்ளது. இங்கு தற்போது நீர் நிரம்பி, அதிக நீர் வெளியேறி வருகிறது.

இந்நிலையில், குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அமைப்பின் நிர்வாகி சாமிநாதன் கூறியதாவது:

நீர் வெளியேறும் பகுதியில் இரு இடங்களில், ஒரு அடி ஆழத்திற்கு உடைக்கப்பட்டு, அதிக நீர் செல்கிறது. இதனால் குளத்தில் நீர் இருப்பு விரைவில் குறையும். மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக சீரமைக்க வேண்டும்.

கழிவுநீர் கலப்பதால், ஆகாயத்தாமரை செடிகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனை தவிர்க்க கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். குளத்தை சுற்றிலும் போடப்பட்டுள்ள இரும்பு வேலி திருட்டு போகிறது. இதனை பாதுகாக்க வேண்டும்.

மாச்சம்பாளையம் பகுதியில், குளத்தை தூர் வாரினால் மேலும் அதிக நீர் நிரம்பும். மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல், இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us