sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உயர் மட்ட பாலத்தில் தடுப்பு சுவர்! விபத்துகளை தடுக்க தேவை

/

உயர் மட்ட பாலத்தில் தடுப்பு சுவர்! விபத்துகளை தடுக்க தேவை

உயர் மட்ட பாலத்தில் தடுப்பு சுவர்! விபத்துகளை தடுக்க தேவை

உயர் மட்ட பாலத்தில் தடுப்பு சுவர்! விபத்துகளை தடுக்க தேவை


ADDED : மார் 21, 2025 10:22 PM

Google News

ADDED : மார் 21, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிமங்கலம்,; பெதப்பம்பட்டியிலுள்ள உயர் மட்ட பாலத்துக்கு தடுப்புச்சுவர் கட்டி, விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், பெதப்பம்பட்டி அருகே, உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. இந்த ஓடையில் முன்பு இருந்த தரைமட்ட பாலம், கடந்த, 2016ல், உயர் மட்ட பாலமாக மேம்படுத்தப்பட்டது.

மத்திய சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், 1.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12.9 மீ., அகலத்தில், 28.3 மீ., நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டது. இரு பக்கங்களிலும், 0.7 மீட்டரில் பாதசாரிகளுக்காக, நடைபாதையும் அமைக்கப்பட்டது.

ஆனால், இரு புறங்களிலும், நடைபாதை முடியும் இடத்தில், தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை. பாலத்தை ஒட்டி பள்ளம் உள்ளதால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

மேலும், அவ்விடத்தில், தெருவிளக்குகள் இல்லாததால், பாதசாரிகள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர்.

எனவே பாலத்தில் போதுமான அளவு தடுப்புச்சுவர் கட்டி, வாகன ஓட்டுநர்கள் அச்சமின்றி அப்பகுதியை கடக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us