sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

/

சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : ஏப் 28, 2025 06:53 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, நெ.10 முத்தூரில் ரோட்டோரம் சாய்ந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது.

கிணத்துக்கடவு அருகே, வன்னி குமார சுவாமி கோவிலில் இருந்து நெ.10 முத்தூர் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளது.

இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள மின் கம்பம் பல நாட்களாக சாய்ந்த நிலையில் இருக்கிறது. மேலும், கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் தாழ்வாக இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போதும், ஓவர் டேக் செய்யும்போதும் இந்த மின் ஒயர்களில் உரசி பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

இது மட்டுமின்றி, இந்த மின்கம்பம் சாய்ந்த இடத்தின் அருகே விளை நிலம் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை இப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால் கால்நடைகளுக்கு விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே, மின்வாரித்தினர் இதை உடனடியாக கவனித்து மின்கம்பத்தை விரைவாக மாற்றியமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us