sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிக பாரத்தால் விபத்து அபாயம்

/

அதிக பாரத்தால் விபத்து அபாயம்

அதிக பாரத்தால் விபத்து அபாயம்

அதிக பாரத்தால் விபத்து அபாயம்


ADDED : பிப் 03, 2025 04:01 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : வடசித்தூர் -- நெகமம் ரோட்டில், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதால், பைக் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

வடசித்தூர் --- நெகமம் ரோட்டில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த வழித்தடத்தில், விளைபொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் சிறு தொழில்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளன.

இந்த வழித்தடத்தில், அதிக அளவு வளைவு பகுதிகள் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் மெதுவாக சென்று வருகின்றனர். இதில், விவசாயிகள் பலர் ஆபத்தை உணராமல், டிராக்டரில் அதிக அளவு பாரம் ஏற்றி கால்நடை தீவனம் கொண்டு செல்கின்றனர். இதனால், பின்னால் வரும் வாகனங்களுக்கு ரோடு முழுமையாக தெரிவதில்லை.

மேலும், ரோட்டில் உள்ள வளைவு பகுதிகளில் விபத்து அபாயம் உள்ளது. பைக் ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதி, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us