sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் உள்வாங்கியதால் ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

/

மண் உள்வாங்கியதால் ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

மண் உள்வாங்கியதால் ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

மண் உள்வாங்கியதால் ரோடு சேதம் வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு


ADDED : ஜூன் 01, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : தொடர்ந்து பெய்த மழையால், பொள்ளாச்சி நகர், அன்சாரி வீதியில் மண் உள்வாங்கி, ரோடு சேதமடைந்துள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில், மொத்தம், 147.78 கி.மீ.,க்கு ரோடுகள் உள்ளன. நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகிறது.

ஏற்கனவே, நகரின் பல வீதிகளில், ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில், சேதமடைந்தது. ஆங்காங்கே தார் ரோடுகளில் ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்களாக மாறி உள்ளன.

அவ்வகையில், பல்லடம் ரோட்டில் இருந்து அன்சாரி வீதி திரும்பும் பகுதியில், மண் உள்வாங்கியதால், ரோடு சேதமடைந்துள்ளது. அவ்வழியே திடீரென சென்று இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கினர். அதனை சீரமைக்க, கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூறியதாவது:

ரோடுகளில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், மழை வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்காமல் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது. ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட வீதிகளில் ரோடுகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

மழையால் வெள்ளம் தேங்கினால், ரோட்டில் நிலையை கண்டறியவும் முடியவில்லை. எனவே, சேதமடைந்த ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us