sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி

/

குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி

குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி

குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூலை 02, 2025 09:58 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறுவதால் ரோடு பழுதடைந்து உள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவு பகுதியில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் ஓரத்தில் உள்ள இணைப்பு சாலையில், பில்லூர் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் வெளியேறும் தண்ணீர் ரோட்டில் நிரம்புவதால், சாலை குண்டும், குழியும் ஆகிவிடுகிறது.

இதுகுறித்து, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தற்போது உடைப்பு ஏற்பட்டு சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதால், சாலை பழுதடைந்து உள்ளது. இது குறித்து, நெடுஞ்சாலை துறையினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறையினருக்கு, கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு ரோட்டில் ஏற்பட்டிருந்த குழிகளை மண் நிரப்பி சரி செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், சாலையில் உள்ள குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் குழாய் உடைப்பை செப்பனிட குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us