/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவில் ரோட்டை தோண்டி ஆய்வு; உதவி பொறியாளர் மீது குற்றச்சாட்டு
/
இரவில் ரோட்டை தோண்டி ஆய்வு; உதவி பொறியாளர் மீது குற்றச்சாட்டு
இரவில் ரோட்டை தோண்டி ஆய்வு; உதவி பொறியாளர் மீது குற்றச்சாட்டு
இரவில் ரோட்டை தோண்டி ஆய்வு; உதவி பொறியாளர் மீது குற்றச்சாட்டு
ADDED : ஆக 27, 2025 10:39 PM

கோவை; தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மதுசூதனன், இரு நாட்களுக்கு முன் கோவை வந்தார். இரவு 10.30 முதல் 1.30 மணி வரை மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்தார்.
48வது வார்டு வி.கே.கே.மேனன் ரோட்டில் தார் தளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார். புதிதாக போட்ட தார் ரோட்டை தோண்டி, அதன் தரத்தை பரிசோதித்தார். தார் தனியாகவும், பெரிய ஜல்லி கற்கள் தனியாகவும் வந்தது. அதிர்ச்சி அடைந்தார். இவ்வாறு ரோடு போட்டால், மழை நீர் இறங்கி, சில நாட்களிலேயே பெயர்ந்து விடும்.
எம்.எஸ்.இன்ஜினியர்ஸ் என்கிற ஒப்பந்த நிறுவனம், இந்த தார் தளத்தை அமைத்தது தெரியவந்தது.  கோபமடைந்த இயக்குனர், பெரிய ஜல்லியில் போட்ட தார் தளத்தை முழுமையாக தோண்டி எடுத்து விட்டு, பொடி ஜல்லிக் கற்களுடன் மீண்டும் அமைக்க உத்தரவிட்டார்.
உடனடியாக புதிய தார் தளம் அமைக்கப்பட்டது. ரோடு பணியை கண்காணிக்காத, மாநகராட்சி உதவி பொறியாளர் குமரேசனுக்கு, குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி, விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''உதவி பொறியாளர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விளக்கம் கொடுத்ததும் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

