sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காரமடை மேம்பாலத்தில் சாலை தடுப்பு வைப்பு

/

காரமடை மேம்பாலத்தில் சாலை தடுப்பு வைப்பு

காரமடை மேம்பாலத்தில் சாலை தடுப்பு வைப்பு

காரமடை மேம்பாலத்தில் சாலை தடுப்பு வைப்பு


ADDED : ஜூன் 29, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடை ரயில்வே மேம்பாலத்தில் விபத்துகள் நிகழாமல் இருக்க நடுப்பகுதியில் நிரந்தர தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. மேம்பாலத்தின் நடுப்பகுதியில் எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் இருந்தது.

மேலும், கோவையில் இருந்து வரும் போது காரமடை மேம்பாலத்தில் ஏறி இறங்கும் போது, கன்னார்பாளையம் செல்லும் ஜங்சன் சாலை வலது பக்கம் பிரிந்து செல்கிறது.

இதற்காக மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இறங்கும் இடத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் உள்ளன. புதிதாக வரும் வாகனங்களுக்கு இந்த தடுப்புகள் குறித்து தெரியாததால், வாகனங்கள் இந்த தடுப்புகளில் மோதும் அபாயம் இருந்தது.

அண்மையில் கார் ஒன்று இந்த தடுப்பில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேம்பாலத்தில் விபத்துகள் நிகழாமல் இருக்க மேம்பாலம் முழுவதும் நடுப்பகுதியில் நிரந்தர தடுப்பு வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இச்செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. தற்போது செய்தியின் எதிரொலியாக காரமடை ரயில்வே மேம்பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.----






      Dinamalar
      Follow us