ADDED : ஏப் 12, 2026 05:42 AM

தேவையான பொருட்கள் n அரை கிலோ மட்டன் ஈரல் n 50 கிராம் சின்ன வெங்காயம் n 2 பச்சை மிளகாய் n சிறிது கருவேப்பிலை n சிறிதுமல்லி இலை n 1 ஸ்பூன் சீரகப் பொடி n அரை ஸ்பூன் கரம் மசாலா n 2 ஸ்பூன் மிளகு n 1 தக்காளி n 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது செய்முறை: கடாயில்,எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கிய பின்பு சுத்தம் செய்த ஈரல் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும், இடையே உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிளகை கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் வற்றிய பின்பு அரைத்து வைத்துள்ள மிளகை சேர்க்கவும். இறக்கும் முன்பு சூடாக இருக்கும் பொழுதே மல்லித் தழை பொடியாக நறுக்கி தூவி நன்கு கலந்து பரிமாறவும்.
