sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ. பயிற்சி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ. பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ. பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ. பயிற்சி


ADDED : அக் 07, 2025 11:27 PM

Google News

ADDED : அக் 07, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில்உள்ள அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் உள்ளார்ந்த சிந்தனையை மேம்படுத்தும் நோக்கில், ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தன்னார்வ நிறுவனத்தின் ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதல்கட்டமாக, சூலுார் கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்துக்கு 2 மணி நேரம் இச்சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மொத்தம் 40 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ., குறித்த செயல்முறை புத்தகங்கள் வழங்கப்பட்டு, எளிய முறை கற்றல் ஊக்குவிக்கப்படுகிறது.

கோடிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் பயிற்றுவிக்கப்படுவதால், மாணவர்கள் பாடங்களைத் தாண்டி சிந்திக்கும் திறன் ஊக்குவிக்கப்படும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.

பள்ளி தலைமையாசிரியர் செந்துாரன் கூறுகையில், ''அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்றல் அவசியம். இதுபோன்ற சிறப்பு வகுப்புகள், மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவதை ஊக்குவிப்பதுடன், இடைநிற்றலையும் தடுக்க உதவுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us