sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு


ADDED : செப் 01, 2025 10:24 PM

Google News

ADDED : செப் 01, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுாரில் வீட்டு கதவை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அன்னுார், அழகாபுரி நகரை சேர்ந்தவர் ரத்தினசாமி, 46. பைனான்ஸ் அதிபர். இவர் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், முக்கால் சவரன் கம்மல், அரைப்பவுன் மோதிரம் ஆகியவை திருட்டுப் போயிருந்தன. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us