/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...
/
ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...
ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...
ரூ.3 லட்சம் பாக்கு விற்பனை மகிழ்ச்சியும்... ஏமாற்றமும்...
ADDED : பிப் 19, 2026 05:54 AM
மேட்டுப்பாளையம்: காரமடையில், அரசு வேளாண் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்கிழமை பாக்கு ஏலம் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த பாக்கு ஏலத்துக்கு, ஒன்பது விவசாயிகள், 30 குவிண்டால் பாக்கு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ வரப்பாக்கு குறைந்தபட்ச விலை, 180 ரூபாய்க்கும், அதிகபட்ச விலை, 211 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, கிலோவுக்கு 11 ரூபாய் கூடுதலாக விலை கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பச்சைப் பாக்கு குறைந்த விலை 55 க்கும், அதிகபட்ச விலை 75 ரூபாய்க்கும் ஏலம் போனது. உரித்த ராசி ரகம் குறைந்த விலை, 400 ரூபாய்க்கும், அதிக விலை 440 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம் உரித்த ராசி பாக்கு கிலோவுக்கு இருபது ரூபாய் குறைந்து ஏலம் போனதால், ஏமாற்றம் அடைந்தனர். மொத்தமாக, ரூ.3 லட்சம் மதிப்பிலான பாக்குகள் விற்பனை ஆனது என, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்தார்.

