sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோளம் சாகுபடிக்கு ரூ.6,000 மானியம்

/

சோளம் சாகுபடிக்கு ரூ.6,000 மானியம்

சோளம் சாகுபடிக்கு ரூ.6,000 மானியம்

சோளம் சாகுபடிக்கு ரூ.6,000 மானியம்


ADDED : ஜூன் 22, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-

கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் சோளம் சாகுபடி சராசரியாக 7,000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்படுகிறது. சோளம் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் வகையில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சோளம் சாகுபடி செய்ய, செயல் விளக்க திடல்கள் அமைக்க ஒரு ஹெக்டருக்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது.

காரமடை வட்டாரத்திற்கு 30 ஹெக்டர் இலக்கு பெறப்பட்டுள்ளது. சோளம் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ.30 மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட தானியங்களை உலர வைப்பதற்கு தார்பாய்கள் ஒன்றுக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படுகிறது.

உயர் ரக அதிக விளைச்சல் தரக்கூடிய கோ-32 ரக சோளம் விதைகள் தானியத்திற்கும், தீவனத்திற்கும் உகந்த ரகம் ஆகும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் சோளம் விதிகளை வேளாண்மை விரிவாக்க மையங்கள், காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் அலுவலகத்தை அணுகி பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.-----






      Dinamalar
      Follow us