sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி

/

44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி

44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி

44 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ரூ.187 கோடி நகைக்கடன் தள்ளுபடி


ADDED : நவ 23, 2024 11:23 PM

Google News

ADDED : நவ 23, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டத்தில், 168 கூட்டுறவு நிறுவனங்களில், 44 ஆயிரத்து 960 உறுப்பினர்களுக்கு, ரூ.187 கோடி நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் அடமானம் வைத்த நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்டு, 2021 ஜன., 31ல் நிலுவையிலிருந்து 344 கோடி பயிர்கடன், 27 ஆயிரத்து 130 விவசாய உறுப்பினர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் ஐந்து பவுனுக்கு உட்பட்டு பொது நகைக்கடன் பெற்றவர்களில், தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 13 ஆயிரம் பயனாளிகளுக்கு 5,013 கோடி அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 168 கூட்டுறவு நிறுவனங்களில், 44 ஆயிரத்து 960 உறுப்பினர்களுக்கு 187.20 கோடி நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் அடமானம் வைத்த நகைகள் மற்றும் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 2,518 சுய உதவிக்குழுக்களில் 25 ஆயிரத்து 180 உறுப்பினர்களுக்கு 62.85 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us