/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு சந்தையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த... ரூ.6 கோடி ஒதுக்கீடு!7 ஷெட், ரேம்ப் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது
/
மாட்டு சந்தையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த... ரூ.6 கோடி ஒதுக்கீடு!7 ஷெட், ரேம்ப் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது
மாட்டு சந்தையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த... ரூ.6 கோடி ஒதுக்கீடு!7 ஷெட், ரேம்ப் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது
மாட்டு சந்தையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த... ரூ.6 கோடி ஒதுக்கீடு!7 ஷெட், ரேம்ப் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது
ADDED : மே 27, 2024 11:40 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில், ஆறு கோடி ரூபாய் செலவில் ெஷட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான காந்தி வாராந்திரச்சந்தை, 30.78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, ஆடுவதைக்கூடம், லாரிப்பேட்டை, தினசரி காய்கறி மொத்த வியாபார அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதில், 10 ஏக்கர் பரப்பளவில், மாட்டுச்சந்தை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. மாட்டுச்சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வெளி நகரங்களிலிருந்து பல்வேறு ரக மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
மாட்டுச்சந்தையில், செவ்வாய் கிழமையில், நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன.
சந்தையில், வாரந்தோறும், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்லும் மாட்டுச்சந்தையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
மழைக்காலங்களில், சேறும் சகதியுமாக தேங்குவதால், வியாபாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சேற்றில் நின்று வியாபாரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும், அடிப்படை வசதிகளும் இல்லாததால், வியாபாரிகள், மாடு வாங்க வருவோர் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.புகழ்பெற்ற மிகப்பெரிய மாட்டு சந்தையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல ஆண்டுகாலமாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாட்டு சந்தையில் ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், என, பொள்ளாச்சிக்கு வந்த அமைச்சர் நேருவிடம் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாட்டு சந்தை மேம்படுத்த, ஆறு கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அதில், மொத்தம், 2,000 மாடுகள் நிற்கும் வகையில், ஏழு ெஷட்கள் அமைக்கப்படுகின்றன. கழிப்பிட வசதி, மாடுகளை இறக்கவும், லாரிகளில் ஏற்றவும் 'ரேம்ப்' வசதி ஏற்படுத்தப்படுகிறது.
மாட்டுச்சாணம், கோமியம் சேகரிக்கும் வகையில், 'சேம்பர்' தனியாக கட்டப்படுகிறது. மாடுகளை ஓட்டி வருவோருக்கு தங்குமிடம் ஏற்படுத்தப்பட உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாட்டு சந்தையில் வியாபாரம் பாதிக்காத வகையில், ஏழு ெஷட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில், இரண்டு ெஷட்கள் அமைக்கப்படும். தொடர்ந்து, மற்ற பணிகளும் நடைபெற உள்ளன,' என்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது, மழைக்காலம் என்பதால், சந்தையில் நிற்க கூட முடியாத சூழல் உள்ளது. அதிகாரிகள், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என்றனர்.