ADDED : ஜன 09, 2026 05:01 AM
கோவை: சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்கும் வகையில் இன்று தெற்கு தாலுகா அலுவலகத்தில் இன்று மாதிரி ஓட்டுப்பதிவு அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் நடத்துகிறார்.
இயந்திரங்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திலுள்ள கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மாதிரி ஓட்டுப்பதிவை கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடத்த கலெக்டர் முடிவு செய்துள்ளார்.
பத்து சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான, 8,391 பேலட் யூனிட்களும், 5,245 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 5,885 வீவீபேட் இயந்திரங்கள் என 19,521 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 25 சதவீதம் இயந்திரங்கள் மாற்றாக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு தெற்கு தாலுகா அலுவலக கிடங்கில் மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
