ADDED : ஜன 08, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே குருந்தமலை அடிவராத்தில், தனி நபர் விவசாய தோட்டத்தில், நேற்று முன் தினம் மண்ணுளி பாம்பு இருப்பது கண்டறியப்பட்டது. விவசாயிகள் உடனடியாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காரமடை வனச்சரகர் ரஞ்சித் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, 1 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை மீட்டு, பில்லூர் டேம் செல்லும் அன்சூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

