sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

/

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு


ADDED : அக் 12, 2025 10:27 PM

Google News

ADDED : அக் 12, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தேவியடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர்.

பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை அடுத்துள்ள முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் புரட்டாசி மாத சஷ்டி பூஜையையொட்டி, முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.






      Dinamalar
      Follow us