/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனிதே நிறைவடைந்தது 'பள்ளி வழிகாட்டி 2025'; திரண்டு வந்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
/
இனிதே நிறைவடைந்தது 'பள்ளி வழிகாட்டி 2025'; திரண்டு வந்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
இனிதே நிறைவடைந்தது 'பள்ளி வழிகாட்டி 2025'; திரண்டு வந்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
இனிதே நிறைவடைந்தது 'பள்ளி வழிகாட்டி 2025'; திரண்டு வந்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
ADDED : பிப் 16, 2025 11:58 PM

கோவை; 'தினமலர்' நாளிதழ் நடத்திய, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியில், ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கான சிறந்த பள்ளி குறித்து கேட்டறிந்தனர்.
'தினமலர்' நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில், 'பள்ளி வழிகாட்டி 2025' இரு தினங்களாக நடந்தது; நேற்று நிறைவடைந்தது.
25 பள்ளிகளின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு பள்ளியின் சிறப்பு அம்சங்களும், அப்பள்ளியின் நிர்வாகிகளால் எடுத்துரைக்கப்பட்டன. பெற்றோர் விபரங்களை கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியை, நேஷனல் மாடல் பள்ளி இணைந்து வழங்கியது. இணை ஸ்பான்சர்களாக அத்வைத் அகாடமி, பிரிட்ஜ்வுட்ஸ் சர்வதேச பள்ளி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளிகள் செயல்பட்டன.
மாலை வரை நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்து, தகவல்களை பெற்று திருப்தியுடன் சென்றனர்.

