sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திறனாய்வு தேர்வில் பள்ளி மாணவர் தேர்ச்சி 

/

திறனாய்வு தேர்வில் பள்ளி மாணவர் தேர்ச்சி 

திறனாய்வு தேர்வில் பள்ளி மாணவர் தேர்ச்சி 

திறனாய்வு தேர்வில் பள்ளி மாணவர் தேர்ச்சி 


ADDED : ஜூன் 15, 2025 10:00 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வில், கோட்டூர் அரசுப்பள்ளி மாணவர் தேர்ச்சி பெற்றார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிந்து, அவர்களை உயர் கல்வியில் ஊக்குவிக்கும் விதமாக, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்தாண்டுக்கான தேர்வு கடந்த ஜன., 25ம் தேதி நடந்தது. இதில், மாணவ, மாணவியர் தலா, 500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை படிப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம், 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, 2,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவையில், 21 மாணவர்கள், 19 மாணவியர் என, 40 பேர் தேர்ச்சி பெற்று, உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.

இதில், கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலன் தேர்ச்சி பெற்றார். தற்போது, பிளஸ் 1 படித்து வருகிறார்.

மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் வரை உதவித்தொகை கிடைக்கும்.

தேர்ச்சி பெற்ற மாணவரை பள்ளி தலைமையாசிரியர் புவனேஸ்வரி பாராட்டினார். பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us