sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

120 அடி ஆழ கிணற்றில் பெண் பிரேதம் தேடுதல் வேட்டை

/

120 அடி ஆழ கிணற்றில் பெண் பிரேதம் தேடுதல் வேட்டை

120 அடி ஆழ கிணற்றில் பெண் பிரேதம் தேடுதல் வேட்டை

120 அடி ஆழ கிணற்றில் பெண் பிரேதம் தேடுதல் வேட்டை


ADDED : டிச 16, 2024 09:41 PM

Google News

ADDED : டிச 16, 2024 09:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் அருகே 120 அடி ஆழ கிணற்றில், தீயணைப்புத் துறையினர் பெண்ணின் பிரேதத்தை மீட்க 24 மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அன்னுார் அருகே அல்லிக்காரம் பாளையத்தில், ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து வீடுகளுக்கு போர்வெல் நீர் சப்ளை செய்யப்படுகிறது. 120 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 118 அடி வரை தண்ணீர் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கிணற்றில் யாரோ குதிப்பது போல் சத்தம் ஏற்பட்டது. அங்கு சென்று பார்த்த போது கிணற்றை ஒட்டி பெண்கள் அணியும் செருப்பு மட்டும் கிடந்தது. யாரையும் காணவில்லை.

இதையடுத்து அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பெண்ணின் உடல் கிடைக்கவில்லை. மீண்டும் நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 'கிணற்றில் உண்மையில் யாராவது குதித்தார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை,' என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us