/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை படுஜோர்
/
கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை படுஜோர்
கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை படுஜோர்
கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை படுஜோர்
ADDED : ஜன 11, 2026 05:04 AM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், பொங்கலையொட்டி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ண கயிறுகள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
மாட்டுப் பொங்கல் அன்று, விவசாயத்திற்கு பேருதவியாக உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு, பொங்கல் வைத்து வழிபடுவது நமது பண்பாடு.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று, ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மாடுகளுக்கு புதிய கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, மணிகள் கட்டி, பொட்டு வைத்து அலங்கரிப்பார்கள். இன்னும் பொங்கல் பண்டிகைக்கு, நான்கு நாட்களே உள்ள நிலையில், தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில், ஆடு, மாடுகளை அலங்கரிக்க தேவை யான கயிறுகள், மணிகள் போன்றவை, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, சிறுவாணி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

