/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள் மேம்பாடு கல்லுாரியில் கருத்தரங்கு
/
பெண்கள் மேம்பாடு கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : பிப் 06, 2025 08:41 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், 'விஷன் விக்கித் பாரத் - 2047; கிராமப்புற பெண்களை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் முயற்சிகள்' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது.
ைஹதராபாத் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிதி உதவியுடன் தேசிய அளவில் நடந்தப்பட்ட கருத்தரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் (தொழில்முறை கணக்கியல்) காயத்ரி வரவேற்றார்.
கோவை பி.எஸ்.ஜி., கலைக்கல்லுாரி பேராசிரியர் சரவணன், கிராமப்புற பெண் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமப்புற பெண்களை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் இந்தியாவின் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
ஆராய்ச்சித் துறைத் தலைவர் உமாபதி, மாணவர் நல இயக்குநர் முத்துக்குமரன், வணிகவியல் துறைத் தலைவர் பிருந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

