/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்
/
மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2026 05:54 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மூத்த குடிமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே, புரவிபாளையம் 'சீனிவாசா பாம்ஸ் குடியிருப்பு முதியவர்கள் சங்கம்' சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதியவர்கள் கூறுகையில், 'வீடுகளை விற்கும் போது கூறியது போன்று வாக்குறுதிகளை நிறுவனம் நிறைவேற்றவில்லை. மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை.
சீனியர் சிட்டிசன்கள் பயன்படுத்த கட்டப்பட்ட உணவு விடுதி, நுாலகம் போன்ற கட்டங்கள் விற்பனை செய்த நிறுவனத்தின் இயக்குனர் பெயரிலேயே உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவு தரமில்லை.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், என, அதிகாரிகளிடம் முறையீட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அ.தி.மு.க. கம்யூ. கட்சியினர், மூத்த குடிமக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

