/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
/
உதவி பேராசிரியரிடம் ஏழு சவரன் நகை பறிப்பு
ADDED : ஜூன் 30, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்:
கோவை சுந்தராபுரம் காந்தி நகர், 6வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் ரெக்ஸ். இவரது மனைவி ரஜினி தெரஸ் பாத்திமா, 47. தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர். நேற்று இரவு, 8:30 மணியளவில், கடைக்கு சென்று பால் வாங்கினார்.
வீட்டிற்கு திரும்பி வரும்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், கழுத்திலிருந்த ஏழு சவரன் தங்க தாலியை பறித்து தப்பினர். போலீசார் விசாரிக்கின்றனர்.