sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நொய்யல் ஆற்றில் கலக்கிறது கழிவு நீர்

/

 நொய்யல் ஆற்றில் கலக்கிறது கழிவு நீர்

 நொய்யல் ஆற்றில் கலக்கிறது கழிவு நீர்

 நொய்யல் ஆற்றில் கலக்கிறது கழிவு நீர்


UPDATED : ஜன 05, 2026 05:55 AM

ADDED : ஜன 05, 2026 05:51 AM

Google News

UPDATED : ஜன 05, 2026 05:55 AM ADDED : ஜன 05, 2026 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்றில் விடப்படும் கழிவுநீர்

சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நகர், நல்லுார் வயல் செரும்பு பள்ளம்அருகே நொய்யல் ஆற்று நீரில் கழிவுநீர் கலக்கிறது. பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் கலப்பதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.



- ரங்கராஜூ:

சாலை ஆக்கிரமிப்பு

ஒண்டிப்புதுார், சூர்யா நகர் ரயில்வே கிராசிங் செல்லும் ரோட்டில்இருபுறமும் ஆக்கிரமிப்பாக உள்ளது. வீடுகளின் ரேம்ப்களை சாலையில் ஆக்கிரமித்து கட்டியுள்ளனர். சாலையும் குண்டும், குழியுமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை சீரமைக்க வேண்டும்.

- நாராயணன்:

உடைந்த சாக்கடை

வேலாண்டிபாளையம், 44வது வார்டு, ராமசாமி லே-அவுட் பகுதியில் சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. இப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. அருகில் உள்ள கம்பத்தில் தெருவிளக்கு எரியவில்லை.

- தங்கவேல்:

குழாய் உடைப்பு

தண்ணீர்பந்தல், எஸ் பெண்டில், 24வது வார்டு, சிவசக்தி நகர், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- நாகமாணிக்கம்:

தினமும் விபத்து

மருதமலை, இந்திரா நகர், இரண்டாவது வீதி சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. ஒருபுறம் தார் முழுவதும் பெயர்ந்து சாலையே இல்லாத அளவிற்கு உள்ளது. அடிக்கடி இச்சாலையில் விபத்து நடக்கிறது.

- பழனிச்சாமி:

மலைபோல் குவியும் குப்பை

கவுண்டம்பாளையம், அம்மாசை வீதி, ஏ.வி.எம்., அவென்யூ அருகே காலியிடத்தில் தொடர்ந்து குப்பையை அருகில் வசிப்போர் வீசிச்செல்கின்றனர். குட்டி மலைபோல குப்பை குவிந்து வருகிறது. சுற்றுப்புறப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- பாலாஜி: கடிக்கும் நாய்கள் மதுக்கரை மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள லட்சுமி நகர் போன்ற பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடிக்கின்றன. கடந்த வாரத்தில் சாலையில் நடந்து சென்ற மூன்று பேரை நாய் கடித்துவிட்டது.

- மோகன்:

போக்குவரத்துக்கு இடையூறு

ராமநாதபுரம், பங்கஜா மில் ரோட்டில் சிக்னல் அருகில் கடைகளின் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பாதசாரிகள் சாலை நடுவே நடந்துசெல்கின்றனர். போக்குவரத்து இடையூறுகளை அகற்ற வேண்டும்.

- முகமத் ரபி:

இடிந்த சாக்கடை

பீளமேடுபுதுார், 52வது வார்டு, திருமகள் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் சுற்றுச்சுவரின்றி உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயோரம் வாகனங்கள் செல்லும்போது சறுக்கி கால்வாயில் விழுகின்றன. இடிந்த கால்வாயை சீரமைத்து பலப்படுத்த வேண்டும்.

- யுவராஜ்:

இருளால் பெருகும் குற்றம்

காளப்பட்டி, அசோக் நகர், சேரன் அவென்யூ, நான்காவது பேஸ் பகுதியில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட முடியவில்லை. வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

- நாராயணன்:






      Dinamalar
      Follow us