sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீரில் கலக்குது கழிவுநீர்; மக்கள் காத்திருப்பு போராட்டம்

/

குடிநீரில் கலக்குது கழிவுநீர்; மக்கள் காத்திருப்பு போராட்டம்

குடிநீரில் கலக்குது கழிவுநீர்; மக்கள் காத்திருப்பு போராட்டம்

குடிநீரில் கலக்குது கழிவுநீர்; மக்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஆக 05, 2025 11:22 PM

Google News

ADDED : ஆக 05, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது என புகார் கூறி, பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்னுார் பேரூராட்சியில், சத்தி சாலையில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்தது. கட்டபொம்மன் நகரில் மின்மோட்டார் பழுதாகி இரண்டு வாரங்களாகியும் சரி செய்யப்படவில்லை.

இதனால் கட்டபொம்மன் நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் மணிகண்டனுடன் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார அலுவலர் ராஜ்குமார், எழுத்தர் அருண்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

'பழுதான மின்மோட்டார் உடனடியாக சரி செய்யப்படும். நாளை (இன்று) கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என உறுதி அளித்தனர்.

இதையடுத்து ஒன்றரை மணி நேர காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us