sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூச்சியூரில் சிவராத்திரி கோலாகலம்; ஆணிக்கால் பாத ரட்சை அணிந்த பூசாரி

/

பூச்சியூரில் சிவராத்திரி கோலாகலம்; ஆணிக்கால் பாத ரட்சை அணிந்த பூசாரி

பூச்சியூரில் சிவராத்திரி கோலாகலம்; ஆணிக்கால் பாத ரட்சை அணிந்த பூசாரி

பூச்சியூரில் சிவராத்திரி கோலாகலம்; ஆணிக்கால் பாத ரட்சை அணிந்த பூசாரி


ADDED : பிப் 27, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் சிவராத்திரி விழாவை ஒட்டி கோவில் பூசாரி ஆணிக்கால் பாதரட்சை அணிந்து ஊர்வலமாக நடந்து வந்தார்.

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூர் உள்ளது. இங்கு சிவராத்திரி விழாவை ஒட்டி மகாலட்சுமி திருக்கோயில், வீரபத்திரசாமி- தொட்டம்மாள் திருக்கோவில், வேட்டைக்கார சாமி கோவில்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவில் அருகே உள்ள மைதானத்தில் மூன்று கோவில்களின் சுவாமிகளும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, கோவிலை நோக்கி நேற்று காலை திருவீதி உலா வந்தது.

பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேட்டைக்கார சாமி கோவில் ஊர்வலத்தின் போது, கோவில் பூசாரி காலில் 'பாதக்கொரடு' எனும் ஆணிக்கால் பாத ரட்சையை அணிந்து கொண்டு ஊர்வலமாக நடந்து வந்தார்.

விழாவில், கோவை நகரை சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us