/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
/
சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 05, 2025 12:10 AM
கருமத்தம்பட்டி: கணியூர் ஊராட்சி, கொள்ளுபாளையம் சிவசக்தி நகரில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து, கடந்த, 2 ம்தேதி காலை, 7:45 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.
கடந்த, 3 ம்தேதி காலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, விமானம் மற்றும் சிவசக்தி விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேக, அலங்கார பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற் பாடுகளை செய்திருந்தனர்.

