/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை உலா வாகன ஓட்டுநர்கள் பீதி
/
ஒற்றை யானை உலா வாகன ஓட்டுநர்கள் பீதி
ADDED : ஏப் 04, 2025 11:21 PM

வால்பாறை, ;வால்பாறையில் கோடை மழை பெய்யும் நிலையில், யானைகள் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது. பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி பகல் நேரத்தில் ரோட்டை கடக்கின்றன. குறிப்பாக வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் பல இடங்களில் யானைகள் பகல் நேரத்திலேயே ரோட்டை கடக்கின்றன. இதனால், இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், யானையின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத நிலை உள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், தற்போது கோடை மழை பெய்யும் நிலையில், வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, யானை, காட்டுமாடு, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் காணமுடிகிறது.
எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் தங்களது வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மாலை, 6:00 மணிக்கு மேல் எஸ்டேட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் இயக்குவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.