/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை 'விசிட்'
/
குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை 'விசிட்'
ADDED : ஜூன் 01, 2025 11:32 PM

வால்பாறை : குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை யானை முகாமிட்டதால், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
பருவ மழைக்கு பின் வனவளம் பசுமையாக காணப்படுவதால், கேரள மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக, வால்பாறைக்கு யானைகள் மீண்டும் வரத்துவங்கியுள்ளன.
வால்பாறையில் தற்போது வேவர்லி, கல்லார், பாறைமேடு, லோயர்பாரளை, சிறுகுன்றா உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, பகல் நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகில் முகாமிட்டது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனிடையே சிறுகுன்றா - வால்பாறை மெயின்ரோட்டில் யானை முகாமிட்டதால், அந்த வழியாக சென்ற சுற்றுலாபயணியர் அதைக்கண்டு ரசித்தனர். இதனிடையே பகல் நேரத்தில், குடியிருப்பு பகுதி அருகில் முகாமிட்ட ஒற்றை யானையின் நடமாட்டத்தை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.