sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்

/

 எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்

 எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்

 எஸ்.ஐ.ஆர். பணிக்கு சிறப்பு ஊதியம் கேட்கின்றனர் துாய்மை பணியாளர்கள்


ADDED : டிச 10, 2025 07:59 AM

Google News

ADDED : டிச 10, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சுகாதார பணிகளுடன், எஸ்.ஐ.ஆர். பணிகளையும் கூடுதலாக பார்க்கும் துாய்மை பணியாளர்கள், ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரதிய கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்க(துாய்மை பணியாளர் பிரிவு) பொதுச் செயலாளர் ஸ்டாலின் பிரபு கூறியதாவது:

எஸ்.ஐ.ஆர்., பணிகளில் துாய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி இருப்பது, அதிக பணிச்சுமையை ஏற்படுத்துகிறது.

காலை, 6:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே அவர்களது பணி நேரம். பணி நேரம் முடிந்த பிறகும் எஸ்.ஐ.ஆர்., பணியை இரவு, 10:00 மணி வரை இவர்கள் பார்க்கின்றனர்.

துாய்மை பணியாளர்களின் மீது, இதுபோன்று திணிக்கப்படும் பணிச்சுமையை கட்டாயம் குறைக்க வேண்டும்.

பி.எல்.ஓ., பணியில் ஈடுபட்ட, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

வீடியோ எடுக்குறாங்க!

'உங்களை பார்த்ததே இல்லை; உங்களை நம்பி எப்படி இந்த எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பத்தை தருவது என வீடுகளுக்கு செல்லும் போது கேள்வி கேட்கின்றனர். படிக்காதவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாமல் தருகின்றனர்; அத்தாட்சி கேட்டு எங்களை வீடியோ எடுக்கின்றனர்' என, துாய்மை பணியாளர் ஆதங்கமாக பேசும் வீடியோ வைரலாகிறது.








      Dinamalar
      Follow us