sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

41 அடியாக உயர்ந்தது சிறுவாணி நீர் மட்டம்

/

41 அடியாக உயர்ந்தது சிறுவாணி நீர் மட்டம்

41 அடியாக உயர்ந்தது சிறுவாணி நீர் மட்டம்

41 அடியாக உயர்ந்தது சிறுவாணி நீர் மட்டம்


ADDED : அக் 09, 2024 12:22 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : வடகிழக்கு பருவ மழை அக்., இரண்டாவது வாரத்தில் துவங்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், இம்மாத துவக்கத்தில் இருந்தே சிறுவாணி அணை பகுதியில், பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 20 மி.மீ., அடிவாரத்தில், 5 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. குடிநீர் தேவைக்காக, 9.70 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. 41.10 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.

இதேபோல், கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு மழைப்பொழிவு இருந்தது.

அதன் விவரம்:

பீளமேடு விமான நிலையம் - 10.30 மி.மீ., வேளாண் பல்கலை - 13.60, பெரியநாயக்கன்பாளையம் - 16.40, அன்னுார் - 12.20, கோவை தெற்கு - 33.40, சூலுார் - 39, தொண்டாமுத்துார் - 8, மதுக்கரை - 12, சின்னக்கல்லார் - 30, வால்பாறை - 30, சோலையாறு - 43 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us