sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

/

 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : டிச 25, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ரத்தினம் குழுமத்தின் ஏ.ஐ.சி., ரைஸ், மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பில், ஆசிரியர்களுக்கான தொழில்முனைவு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் நடந்த முகாமில், சென்னை மண்டல மத்திய வித்யாலய சங்கத்தின் துணை ஆணையர் செந்தில் குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பிரதான் மந்திரி பள்ளிகள் திட்டத்தினைச் சார்ந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியில், தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 190க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

வாத்வானி பவுண்டேஷன் இணைந்து நடத்திய பயிற்சி முகாமை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக பிராந்திய ஒருங்கிணைப்பாளர் நந்தஜித் ராபா, வாத்வானி பவுண்டேஷனைச் சேர்ந்த ஸ்வேதா, விவேக் குமார் துவக்கி வைத்தனர்.

ரத்தினம் குழுமத்தின் தலைவர் மதன் செந்தில், தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், ரத்தினம் குழுமத்தின் தலைமை வணிகப் பிரிவு தலைவர் நாகராஜ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us