sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; ரூ.4 கோடி நிலம் மீட்டது மாநகராட்சி

/

எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; ரூ.4 கோடி நிலம் மீட்டது மாநகராட்சி

எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; ரூ.4 கோடி நிலம் மீட்டது மாநகராட்சி

எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; ரூ.4 கோடி நிலம் மீட்டது மாநகராட்சி

1


ADDED : அக் 28, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 28, 2024 11:56 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ஒண்டிப்புதுார் எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள, 19 சென்ட் நிலத்தை, கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மீட்டனர்.

கோவை, ஒண்டிபுதுாரில், 1960ல், 6.14 ஏக்கரில் எஸ்.எம்.எஸ்., லே-அவுட் உருவானது. அதில், 65 சைட் பிரிக்கப்பட்டது. பொது ஒதுக்கீடு இடமாக, பள்ளி கட்டுவதற்கு, 43 சென்ட், விளையாட்டு மைதானத்துக்கு, 19 சென்ட் ஒதுக்கப்பட்டது.

அங்கு, தற்போது மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. கட்டடங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டன. மாநகராட்சிக்கு சொந்தமான அவ்விடத்துக்கு, மாநகராட்சி மூலமாகவே காலியிட வரி நிர்ணயிக்க, ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சித்தனர்.

இது சம்பந்தமாக, ஐகோர்ட்டில் நடந்த வழக்கில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அவ்விடத்தை மீட்டு, அறிவிப்பு பலகை வைக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.

மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அவ்விடத்துக்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

அவ்விடத்தில், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் இருக்குமென நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர்.

ஐகோர்ட் உத்தரவிட்டு, ஆறாவது நாளில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி, மாநகராட்சி பள்ளி மாணவர்களும், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும், விளையாட்டு பூங்கா ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us