sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சமூக ஆர்வலர்களுக்கு கிடைத்தது விருது

/

சமூக ஆர்வலர்களுக்கு கிடைத்தது விருது

சமூக ஆர்வலர்களுக்கு கிடைத்தது விருது

சமூக ஆர்வலர்களுக்கு கிடைத்தது விருது


ADDED : ஜன 28, 2024 11:30 PM

Google News

ADDED : ஜன 28, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி;கணியூரில் நடந்த விழாவில், உறவுகள் அறக்கட்டளை சார்பில், சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கணியூர் ஊராட்சியில் செயல்படும் உறவுகள் அறக்கட்டளையினர், கொரோனா பெருந்தொற்று காலத்தில், உணவு வழங்குதல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல உதவிகளை செய்தனர். தொடர்ந்து, சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு துறைகளில் சமூக சேவை செய்து வரும், ஆர்வலர்களுக்கு, 'உறவுகள் விருது - 2024' வழங்க முடிவு செய்தனர்.

கவுசிகா நதிக்கு உயிரூட்டிய செல்வராஜ், சூலுார் நண்பர்கள் ரத்த தான குழு நிறுவனர் தர்மராஜ், பசுமை பரப்பை அதிகரித்து வரும் கரடிவாவி ஆசிரியர் உதயகுமார், கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சக்திவேல், ஆதரவற்றோருக்கு உணவு அளித்து வரும், பாரதி பசியாற உணவு அறக்கட்டளை நிறுவனர் வேலுசாமி, 25 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த செந்தில்குமார், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம், குப்பையை உரமாக்கும் பட்டதாரி இளைஞர்கள் சரண்ராஜ், பிரசாத் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை, ராக் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் வழங்கி பாராட்டினார்.

அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us