ADDED : செப் 17, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கலெக்டர் பவன்குமார் தலைமையில் நேற்று நடந்தது.
உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஏற்றனர். பேரூராட்சி உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், உறுதிமொழியை வாசிக்க, மற்ற அலுவலர்கள் ஏற்றனர். மாநகராட்சி துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.